For Daily Alerts
Just In
தேனி மலைப் பாதையி்ல் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி
தேனி: தேனி அருகே மலைப் பாதையில் 40 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலியாயினர். 26 பேர் காயமடைந்தனர்.
தேனி மாவட்டம் இரவங்கல் ஆற்று மலைப் பாதையில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு இந்த விபத்து நடந்தது.
அரசு பஸ் ஒன்று 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த கூலித் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாயினர். மேலும் 26 பேர் படுகாயமடைந்தனர். இதில் 8 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
காயமடைந்தவர்கள் சின்னமனூர், ஹைவேவிஸ் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சின்னமனூரில் இருந்து ஹைவேவிசுக்கு தினமும் 2 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகி்ன்றன. இதில் ஒரு பஸ்சின் டிரைவர் விடுப்பில் உள்ளதால் மற்றொரு டிரைவர் 2 நாட்களாக தொடர்ந்து கண் விழித்து பஸ்சை ஓட்டியுள்ளார். இதனால தான் விபத்து நடந்துள்ளது என்று அப் பகுதியினர் கூறுகின்றனர்.
Comments
Story first published: Wednesday, May 19, 2010, 17:24 [IST]