கோவை குண்டுவெடிப்புக் கைதி பரோலில் வந்து திருமணம்
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற கைதி தடா அஸ்லாமுக்கு இன்று கோவையில் திருமணம் நடந்தது.
கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் தவிர, மதுரையில் சிறை அதிகாரியைக் கொலை செய்த வழக்கிலும் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றவர் அஸ்லாம். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கும், உறவுப் பெண் ஷமா என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. இதையடுத்து அவருக்கு இன்று 10 மணி நேர பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் அஸ்லாம்.
பலத்த பாதுகாப்புடன் அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வைத்து எளிய முறையில், அஸ்லாமுக்கு திருமணம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications