ரூ 100 கோடி மோசடி - கிரீன் லைப் நிதி நிறுவன அதிபர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி
கோவை: கோவையில் ரூ 100 கோடி மோசடி செய்த கிரீன் லைப் நிதி நிறுவன அதிபர்களின் ஜாமீன் மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கோவை, சென்னை, நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் கிரீன் லைப் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்தது.
ஆநால் முதலீட்டாளர்களிடம் வசூல் செய்த பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக இந்த நிறுவன உரிமையாளர்கள் அஸ்மத் கோரி (36), அவரது சகோதரர்கள் இஸ்மாயில்கான் கோரி, ஹர்பாஸ் கோரி ஆகியோர் மீது கோவை பொருளாதார குற்றவியல் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், அவர்கள் தங்களை ஜாமீனில் விடக்கோரி, கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையில் இருக்கும் அவர்களிடம் சிறையில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு நீதிபதி சீனிவாசன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications