பிளஸ் டூ கணித தேர்வின் விடைத்தாள் கேட்டு அதிக விண்ணப்பங்கள்
சென்னை: இந்த ஆண்டு கணிதத் தேர்வில் 200க்கு 200 எடுத்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் கணிதத் தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியாயின. மதிப்பெண் குறித்த சந்தேகங்கள் இருந்தால் விடைத்தாளின் நகலை பெற்று மறு மதிப்பீடு செய்யலாம்.
இந்த ஆண்டு கணிதத் தேர்வில் 200க்கு 200 எடுத்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது.
இதனால் கணிதத் தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு அதிகம் பேர் விண்ணப்பித்து வருகின்றனர்.
விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
கடந்த ஆண்டு மொத்தம் விடைத் தாள் நகல் கேட்டு 45,000 பேர் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு இது 60,000த்தை தாண்டும் என்று தெரிகிறது.
விடைத்தாள் நகலுடன் மறுமதிப்பீடு விண்ணப்பம் ஒன்றும் இணைத்து வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications