உகாண்டா: ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் மரண தண்டனை
Subscribe to Oneindia Tamil
அம்பாலா: ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் மரண தண்டனை வழங்க உகாண்டா அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது.
பல நாடுகளில் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவோர் திருமணம் செய்து கொள்ள சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. சில நாடுகள் இந்த விஷயத்தில் எந்த நிலையையும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றன.
இந் நிலையில் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டு்ளது.
இதுவரை அங்கு ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை, அபராதம் போன்றவை விதிக்கப்பட்டு வந்தது. இப்போது மரண தண்டனை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications