லைலா போயும் சென்னையில் தொடர்ந்து கடல் சீற்றம்
சென்னை : லைலா புயல் ஆந்திராவில் கரையைக் கடந்து வலுவிழந்திருந்தாலும், சென்னையில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து பலத்த காற்றும் வீசி வருகிறது.
இந்த கடல் சீற்றத்தில் மீன் பிடிக்கப் போன ஐந்து மீன் பிடி படகுகள் கடலில் கவிழ்ந்தன.
வங்கக் கடலில் உருவாகி தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா மாநிலங்களைப் பயமுறுத்தி விட்ட லைலா புயலால், தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் குறிப்பாக சென்னையில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை நாட்களாக பெய்த கன மழையால் சென்னை நகரம் தட்டுத் தடுமாறிப் போய் விட்டது.
பலத்த மழையும், கடுமையான காற்றுமாக சென்னை நகரம் ஸ்தம்பித்துப் போனது. அக்னி நட்சத்திர வெயிலின் அகோரத்தை அடியோடு குறைத்து விட்டது இந்த லைலா புயல்.
லைலா புயல் ஆந்திராவில் நேற்று கரையைக் கடந்து விட்டது. இருப்பினும் அது முற்றிலும் கலையாமல் மீண்டும் வங்கக் கடலில் புகுந்து மேலும் வலுவான புயலாக மாறும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் மேற்கு வங்கம், ஒரிசா, வங்கேதசம் ஆகியவற்றில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புயலின் போக்கை வானிலை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
லைலா புயலால், கடல் அலையின் சீற்றமும் அதிகமாக காணப்பட்டது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையமும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
நேற்று முன்தினம் இரவு முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரளவு மழை குறைந்தது. நேற்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால், கடல் பகுதி தொடர்ந்து சீற்றமாகவே காணப்பட்டது. அலைகள் பெரிதாக எழுந்து சுழன்று கரையில் வேகமாக மோதின.
இதனால், பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே, மீன்பிடி தடை காலம் என்பதால் விசை படகுகள் கடலுக்குள் செல்லாமல் ஓய்வு எடுத்து வருகின்றன. இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால், பெரும்பாலான பைபர் படகு மற்றும் கட்டு மரங்கள் நேற்று கடலுக்குள் செல்லவில்லை.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட தமிழக மீன்பிடி துறைமுகங்களில் பைபர் படகுகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மீன் வரத்தும் வெகுவாக குறைந்தது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடல் சீற்றத்தில் சிக்கி நேற்று காலை 5 படகுகள் கவிழ்ந்தன.
மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடலோரப் பாதுகாப்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் கடலைக் கண்காணித்தபடி உள்ளனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications