லக்சம்பர்க் நாட்டு வங்கியை வாங்கியது இந்துஜா குழுமம்!
சென்னை: லக்சம்பர்க் நாட்டின் தனியார் வங்கியை வாங்கியது இந்தியாவின் இந்துஜா குழுமம்.
கேபிசி குழுமத்தின் 'கேபிஎல் யூரோப்பியன் பிரைவேட் பேங்கர்ஸ் எஸ்ஏ'யை வாங்க ரூ 8770 கோடி கொடுத்துள்ளது இந்துஜா குழுமம். இந்த வங்கிக்கு 47.4 பில்லியன் யூரோ சொத்துக்கள் உள்ளன.
ஐரோப்பாவின் 10 நாடுகளில் 55 கிளைகளுடன் இயங்குகிறது இந்த வங்கி. ஜேபி மார்கன் சேஸ் ஆலோசனையுடன் டாய்ஷ் வங்கி மற்றும் ஸ்பென்ஸர் ஹவுஸ் பார்ட்னர்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வங்கியை வாங்குகிறது இந்துஜா.
கேபிஎல் வங்கியில் உள்ள தனது அனைத்து பங்குகள் மற்றும் துணை நிறுவனப் பங்குகளையும் இந்துஜாவுக்கு விற்கிறது கேபிசி. இந்த வங்கியை வாங்கிய பிறகு, அதை 100 நாடுகளில் பல நூறு கிளைகளுடன் பரவச் செய்வதே தங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ளது இந்துஜா குழுமம்.
இதுகுறித்து இந்துஜாவின் தலைவர் ஸ்ரீசந்த் இந்துஜா கூறுகையில், "இந்த வங்கியை நாங்கள் வாங்குவதால், அதில் பணியாற்றுபவர்கள் யாரும் பயம் கொள்ளத் தேவையில்லை. முன்னிலும் மேம்பட்ட சூழலில், நிறைவான சம்பளத்துடன் பணியாற்றலாம். ஆசியாவிலும் இந்தியாவிலும் இந்த வங்கியை பிரபலப்படுத்துவதே எங்கள் நோக்கம்" என்றார்.












Click it and Unblock the Notifications