ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்தவித விசாரணைக்கும் தயார்!-ராசா

ஹைதராபாத் நகரில் உலக தொலை தொடர்பு மாநாடு நேற்று தொடங்கியது. 142 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் அதில் பங்கேற்றனர். மாநாட்டை ராசா தொடங்கி வைத்தார்.
பின்னர் அவரைச் சந்தித்த நிருபர்கள், 2008ம் ஆண்டு நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏல விவகாரம் பற்றி கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ராசா, தங்களுக்கு எதிராக ஏதாவது குற்றச்சாட்டு எழுந்தால் அது தொடர்பான விசாரணையை ஆட்சியாளர்கள் அனைவருமே எதிர் கொள்வது உலக வழக்கம்.
பிரதமர் மன்மோகன் சிங்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 1999ம் ஆண்டு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உருவாக்கப்பட்ட விதிகளையே நான் பின்பற்றினேன்.
இது தொடர்பாக பிரதமரிடமும் விளக்கம் அளித்துள்ளேன். 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் எந்த விதி மீறலும் நடைபெறவில்லை. இது தொடர்பாக, எந்தவித வெளிப்படையான விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன். மேலும், 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.
முன்னதாக மாநாட்டில் அவர் பேசுகையில், வளரும் நாடுகளில் தொலைத்தொடர்பு துறையின் அபார வளர்ச்சிக்கு கம்பியில்லா தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியுள்ளது. அகண்ட அலைவரிசை சேவை துறையின் வளர்ச்சிக்கும் கம்பியில்லா தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும் என நம்புகிறோம். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு வளர்ச்சியை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கேற்ற சட்ட அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இந்த நாட்டை அறிவாற்றல் மிகுந்த சமுதாயமாக மாற்றுவதற்கு தகவல் தொழில்நுட்பம் சிறந்த கருவி. பழைய தொழில்நுட்பத்தில் இருந்து நவீனத்துக்கு தொலைத்தொடர்புத் துறை மிக வேகமாக மாறி வருகிறது. இந்தத் துறையின் உற்பத்தி கேந்திரமாக இந்தியாவை மற்றுவதே எங்களுடைய நோக்கம்.
உள்நாட்டினர் அல்லது வெளிநாட்டினர் என தொலை தொடர்பு மேம்பாட்டில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் இந்தியாவில் பாதுகாப்பான சூழல் கிடைக்கும்.
60 கோடி இணைப்புகளுடன் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய தொலைபேசி நெட்வொர்க் கொணாட நாடாக இந்தியா உள்ளது. மாதந்தோறும் 2 கோடி புதிய இணைப்புகள் தரப்படுகின்றன. அதே நேரத்தில், சாதாரண சேவையைக் கூட பெற முடியாத நிலையில் உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வை போக்க, இந்த மாநாடு வழிவகை செய்யும் என கருதுகிறேன் என்றார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications