வர்த்தக ஒப்பந்தம்- இந்தியாவுக்கு எதிராக இலங்கையர் ஆர்ப்பாட்டம்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இந்தியாவுடன் வரும் ஜூன் மாதம் இலங்கை கையெழுத்திட உள்ள வர்த்தக ஒப்பந்தத்துக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

'சீபா' (Comprehensive Economic Partnership Agreement -CEPA) எனப்படும் வர்த்தக உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட உள்ளன.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, ஜூன் 8-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவரது இந்த பயணத்தின் போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே 'சீபா' எனும் வர்த்தக உடன்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த உடன்படிக்கை இலங்கையை விட இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் நிறைந்ததாக காணப்படுவதாக இலங்கையர்கள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

எனவே இந்தியாவுடன் வர்த்தகம் செய்து கொள்ளக்கூடாது என்று கூறி டாக்டர்கள், என்ஜீனியர்கள் உள்பட ஏராளமானோர் கொழும்புவில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உள்நாட்டுத் தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறி கோஷமிட்டனர். அதிபரின் அலரி மாளிகை முன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதையடுத்து போராட்டக்காரர்களை அழைத்து அதிபர் மகிந்த ராஜபட்ச பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையை பாதிக்கும் எந்த ஒரு உடன்பாட்டையும் தனது தலைமையிலான அரசு மேற்கொள்ளாது என்று அவர்களிடம் உறுதி அளித்தார்.

அப்படி ஒருவேளை உடன்பாடு செய்து கொள்ளப்பட்டாலும் அது இரு நாடுகளுக்கும் சம அளவில் பலனை அளிப்பதாகவே இருக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+