இலங்கையில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கைது
கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகளின் தளபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலிகளின் தளபதிகளில் ஒருவரான செல்வகுமார் உதயன் இலங்கை புல்மோட்டை கட்டகுளம் என்னுமிடத்தில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள.
அவர் கிழக்குப் பகுதியில் முக்கியத் தளபதியாக செயல்பட்டவர் என்றும், ஒரு வீட்டில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
'போர் வெற்றியால் பின்தள்ளப்பட்ட அதிகார பகிர்வு பேச்சு':
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறித்து இலங்கையில் அரசியல் தலைவர்கள் பேசி வந்தனர். ஆனால், போரில் இலங்கைக்கு கிடைத்த ராணுவ வெற்றி, அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய காரத்,
இலங்கையில் போர் முடிந்து ஓராண்டாகிறது. அந்த நாட்டில் ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்ல இப்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறித்து இலங்கையில் அரசியல் தலைவர்கள் பேசி வந்தனர். ஆனால், போரில் இலங்கைக்கு கிடைத்த ராணுவ வெற்றி, அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை இரண்டு முக்கியமானப் பிரச்சனைகள் உள்ளன.
முதலாவது, தமிழர் பகுதிகளில் மீண்டும் சகஜ நிலையை ஏற்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்கும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்.
இலங்கையில் சிங்களர்கள் மற்றும் தமிழர்களின் அரசியல் தலைவர்கள் அரசியல் தீர்வை நோக்கி பணியாற்ற வேண்டும். பிரச்சனைகளை ஜனநாயக ரீதியில் பேசித் தீர்ப்பதற்கு பொதுவான தளம் உருவாக்கப்பட வேண்டும்.
அந் நாட்டு அதிபர் ராஜபக்சே ஜூன் 8ம் தேதி இந்தியா வருகிறார். அப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு விரைந்து மறுவாழ்வு அளிக்கவும், இந்தப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவும் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றார் காரத்.
இக் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், மத்தியக் குழு
உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications