காதல் விவகாரம்-வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்!
கும்பகோணம்: கும்பகோணத்தில் காதல் விவகாரத்தில் வீடு புகுந்து குடும்பத்தினரை அரிவளால் வெட்டிய 4 பேரை கும்பல் கல்லூரி மாணவியை கடத்திச் சென்றது.
கும்பகோணம் சிங்காரம் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகள் சண்முகப்பிரியா (22). கல்லூரியில் படிக்கும் இவர் சிவா (24) என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சண்முகப்பிரியாவின் வீட்டில் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து சிவாவிடம் பேசுவதை அவர தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவா தனது நண்பர்கள் அப்பு, சதீஷ், ரமேஷ் ஆகியோருடன் சண்முகப்பிரியாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை கடத்த முயன்றார்.
அதை தடுக்க முயன்ற கோவிந்தராஜ், அவரது மனைவி பேபி, மகன் மணிகண்டன், இன்னொரு மகள் கோகிலா ஆகியோரை இந்தக் கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு சண்முகப்பிரியாவை ஆட்டோவில் கடத்திச் சென்றது.
இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து இந்தக் கும்பலை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications