பாளை சிறையில் போலீசார்-கைதிகள் பயங்கர மோதல்
நெல்லை: பாளையங்கோட்டை சிறையில் நேற்றிரவு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதால் கைதிகள், காவலர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1600க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். உள் சிறையில் 10 பிளாக்குளில் தண்டனை கைதிகளும், வெளி சிறையில் உள்ள 3 பிளாக்குகளில் விசாரணை கைதிகளும் உள்ளனர்.
கைதிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடந்ததை அடுத்து 1998-ம் ஆண்டுக்கு பிறகு கைதிகள் ஜாதிவாரியாக பிரிக்கப்பட்டு தனி தனி பிளாக்குகளில் அடைக்கப்பட்டனர்.
மேலும் கைதிகளுக்கு இடையே செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் தராளமாக புழங்கி வருகின்றன.
இதனால் சிறை அதிகாரிகள் மற்றும் கமண்டோ படையினர் அடிக்கடி சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். கைதிகளை பார்க்க வருகிறவர்கள், கோர்டுக்கு சென்று வரும் கைதிகள் ஆகியோர் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கம் குறைந்தபாடில்லை.
கைதிகள் தினமும் காலை 6 மணிக்கு திறந்து விடப்பட்டு மாலை 6 மணிக்கு செல்லில் அடைக்கப்படுகின்றனர்.
இந் நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு வெளிச் சிறையில் உள்ள கைதிகள் செல்லில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு இரவு புதுக் கட்டிடத்தில் உள்ள 2வது பிளாக்கில் துணை சிறை அலுவலர் சேகர் தலைமையில் சிறை காவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த கைதிகள் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் காவலர்கள், கைதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கைதிகள் ஓன்று திரண்டு காவலர்களை தாக்க முயன்றனர்.
இதையடுத்து கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட கைதிகளை உதைத்ததாகத் தெரிகிறது.
தகவல் அறிந்ததும் சிறை அலுவலர் அமிர்தலால் தலைமையில் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். காவலர்கள் தாக்கியதில் கைதிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் சிறைவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications