மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை தொடங்கியது
தமிழகம்-கேரள உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை எப்போதும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். இம்முறை கேரளத்தில் தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் இம்மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
ஆனால் அதற்கு நேர்மாறாக தென்மேற்கு பருவ மழை வழக்கம் போல் கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்ய தொடங்கியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் தென்மலை நீர்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஆரியங்காவு பாலருவியிலும் தண்ணீர் கொட்ட தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கேரளா மாநிலம் நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
இங்கு அருவி பகுதிக்கு செல்ல பாதை சீராக இல்லாததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையோடுதான் செல்ல வேண்டும். அருவிக்கு செல்லும் இடைவெளியை சீரமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இன்னும் சில தினங்களில் இப்பகுதிகளில் சீசன் முழுமையாக களை கட்ட தொடங்கும். மேலும் குற்றாலம் அருவியில் குறைவாகவும், ஐந்தருவியில் குளிக்கும் அளவுக்கும் தண்ணீர் வரத்து உள்ளது.













Click it and Unblock the Notifications