பணம் அனுப்ப பல வழிகள் இருக்கு.. ஷோஃபாவில் தான் அனுப்ப வேண்டுமா? உதயநிதிக்கு திருமாவளவன் பதில்
சென்னை: பணம் அனுப்ப பல வழிகள் இருக்கும் போது அதனை ஏன் ஷோஃபாவில் தான் அனுப்ப வேண்டுமா என உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் மறைமுக பதிலடி கொடுத்தார். என்னை முதல்வராக்கும் முயற்சியை நான் தடுத்தேன், அதை ஏன் யாரும் சொல்லவில்லை எனவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றபோதே நாங்கள் விஜய்க்கு ஆதரவு அளித்து இருக்க முடியும் ஆனால் நாங்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடைசி நிமிடம் வரை திமுக தலைமைக்கு தகவல் தெரிவித்தோம் என்று திருமாவளவன் கூறினார்.
முன்னதாக, "நம் பெயரை சொல்லி, நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டு வாங்கி, உடன்பிறப்புகள் உழைப்பால் சட்டமன்ற உறுப்பினராகி, சிலர் அமைச்சராகவே ஆகிவிட்டனர். அவர்கள் யாரும் விமர்சனம் செய்வது கிடையாது. ஏனென்றால் சோஃபாவை பிடுங்கிவிடுவார்கள் இல்லையா?" என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து இருந்தார்.

சென்னை காமராஜர் அரங்கில் விசிக விருது வழங்கும் விழா நடந்தது. அப்போது திருமாவளவன் பேசியதாவது:- முன்னாள் முதல்வர் அண்ணன் மு.க ஸ்டாலின் திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே உள்ள அரசியல் உறவை இல்லை என அறிவித்து இருக்கிறாரா? இந்த முடிவை அவர் எடுத்தாரா? நான் எடுத்தேனா? என் தம்பிகளுக்காக நான் இதனை முன் வைக்கின்றேன். யார் மீதும் எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.
அரசியல் என்பது முற்றிலும் வேறு. தனிநபர் உறவு என்பது வேறு. எல்லாத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. இந்த கூட்டணியில் இருந்தால் அவரிடம் பேசக்கூடாது. அந்த கூட்டணியில் இருந்தால் அவரிடம் பேசக்கூடாது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படி இருக்கிறது. டெல்லியில் கூட இப்படி இல்லை. அதை உடைத்தவன் திருமாவளவன். அப்போது திமுக கூட்டணியில் இருந்த போது, முதன் முதலாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை முதலில் பார்க்க போனேன்.. பார்த்துவிட்டு வந்தாலும் திமுக கூட்டணியில் இருப்போம். எடப்பாடியை பார்த்தாலும் திமுக கூட்டணியில் இருப்போம்.
இன்று தவெக கூட்டணியில் இருப்பதனால், நாங்க மழுப்பி பேசுறோமாம்.. சோசியல் மீடியாவுக்கு போகாமல் இருந்தாலே நாம் உருப்பட்டுவிடுவோம். நம் கட்சி விடுபட்டுவிடும். அர்ப்பர்கள் தான் அங்கு அதிகம் இருக்கிறார்கள். நம் கட்சி வளர்வதை பிடிக்காதவர்கள் அவதூறுகளை பரப்புகிறார்கள். எப்புட்றா இவங்க கூட வந்தவங்க எல்லாரும் காலியாகிவிட்டாங்க இவன் மட்டும் வளர்கிறான்.. சிலர் திருமாவளவன் கிங் மேக்கர் என போடுகிறார்கள். நானா போட சொன்னேன்..
118 தொகுதிக்கு 2 தொகுதிகள் தவெகவுக்கு வேண்டும். கடைசியாக நாங்க இருந்ததால் நாங்க தான் கிங் மேக்கர் ஆக இருந்தோம். இதை விஜய் தீர்மானிக்கவில்லை. திருமாவளவன் தீர்மானிக்கவில்லை. காலம் தீர்மானிக்கிறது. எம்மை ஓரம் கட்ட பார்த்தாலும், ஒதுக்கி வைக்க பார்த்தாலும் விசிக மையம் என்பதே மையம் என்பதை தீர்மானிப்போம் என பல ஆண்டுகளுக்கு முன்பே மேடைகளில் முழங்கியிருக்கிறோம். நீ தலித் இயக்கம் என பார்க்கலாம்.. திருமாவளவன் தலித் என பார்க்கலாம். 2 சீட் என அலட்சியப்படுத்தி சொல்லலாம். ஆனால் காலம் எங்க பக்கம் என்று சொல்கிறோம்.












Click it and Unblock the Notifications