ஹெட்லியை விசாரிக்க யு.எஸ்சில் இந்திய அதிகாரிகள்!

ஹெட்லியை இந்திய அதிகாரிகள் விசாரிக்கவுள்ளது இதுவே முதல் முறையாகும். மும்பையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலை நடத்த பல வகையில் உதவியாக இருந்தவன் ஹெட்லி. இது அமெரிக்க விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து ஹெட்லியை விசாரிக்க இந்தியா அனுமதி கோரியது. ஆனால் அமெரிக்கா இழுத்தடித்து வந்தது. இந்த நிலையில் ஹெட்லி, அமெரிக்க போதைப் பொருள் தடுப்புப் போலீஸாருக்காக உளவு பார்த்த உளவாளி என்ற விவரமும் தெரிய வந்து இந்திய அதிகாரிகளை குழப்பியது.
இந்த நிலையில்,ஹெட்லியை விசாரிக்க இந்தியத் தரப்பிலிருந்து அமெரிக்காவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கா சென்றிருந்தபோது இதுகுறித்து அதிபர் ஒபாமாவிடம் நேரில் வலியுறுத்தினார்.
இதையடுத்து ஹெட்லியை விசாரிக்க இந்தியாவுக்கு அனுமதி கிடைத்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து விசாரணையாளர் குழு அமெரிக்கா விரைந்துள்ளது. இன்று சிகாகோவுக்கு வந்தடைந்தது இந்தியக் குழு.
தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் கொண்ட குழுவாக இவர்கள் வந்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் ஹெட்லி கைது செய்யப்பட்ட பின்னர் இப்போதுதான் முதல் முறையாக இந்திய அதிகாரிகள் ஹெட்லியை விசாரிக்கவுள்ளனர்.
இந்தியக் குழு ஹெட்லியை விசாரிக்கும்போது ஹெட்லியின் வக்கீல் மற்றும் ஒரு எப்.பி.ஐ. அதிகாரி ஆகியோர் உடன் இருப்பார்கள்.
சிகாகோ மெட்ரோபாலிடன் சீர்திருத்த மையத்தில் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளான் ஹெட்லி. அங்கு வைத்தே அவனிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
ஹெட்லியை விசாரித்த பின்னர் இந்திய கோர்ட்டில் தேசிய புலனாய்வு ஏஜென்சி வழக்கு தொடரும்.
-
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications