அதிமுகவிலிருந்து மேலும் பல தலைவர்கள் திமுகவில் இணையவுள்ளனர்-ஸ்டாலின்

தர்மபுரி தொகுதி முன்னாள் எம்.பி. சேகர் இல்லத் திருமண விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்தது. மணமக்களை வாழ்த்தி ஸ்டாலின் பேசுகையி்ல்,
தமிழக அரசியலில் முகவரி இழந்தவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் இடமாக திமுக திகழ்கிறது.
தமிழகத்தின் ஒரு பிரதான கட்சியின் (அதிமுக) கூடாரம் காலியாகி கொண்டே வருகிறது. அக்கட்சியிலிருந்து மேலும் பலர் விரைவில் திமுகவில் இணைய உள்ளனர்.
'சஸ்பென்ஸ்' கருதி, இதுகுறித்து தற்போதைக்கு விவரங்கள் சொல்ல விரும்பவில்லை என்றார்.
ஜூலை முதல் சென்னைக்கு கடல் குடிநீர்:
முன்னதாக மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி கிராமத்தில் ரூ.2,300 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையியில் இருந்து, குடிநீரை சென்னை நகருக்கு கொண்டு செல்லும் கட்டமைப்பின் சோதனை இயக்கத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த ஆலையில் சுத்திகரிக்கப்பட்டு தாயாரும் கடல் குடிநீரை சென்னைக்கு கொண்டு செல்வதற்கான சோதனை இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளேன்.
15 அல்லது 20 நாள்கள் சோதனைக்கு பிறகு சென்னைக்கு குடிநீர் வினியோகத்தை முதல்வர் கருணாநிதி ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வைக்க உள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications