செங்கோட்டை ஹாஸ்டல் மாணவிகள் திடீர் வாந்தி-மயக்கம்
செங்கோட்டையில் ஆதி திராவிடர் நலத்துறை மகளிர் விடுதி உள்ளது. இதி்ல் கேரளா, தமிழக எல்லையோர கிராமங்களை சேர்ந்த ஏழை மாணவிகள் தற்போது 19 பேர் தங்கி படித்து வருகின்றனர்.
நேற்று காலை காலை சிற்றுண்டியை முடித்து பள்ளி சென்ற மாணவிகள் மதிய உணவுக்கு வந்து சாப்பிட்டு விட்டு (எஸ்ஆர்எம் மகளிர் மேல்நிலைப்பள்ளி) வகுப்புக்கு சென்றனர். அப்போது பிளஸ்டூ படிக்கும் விடுதி மாணவிகள் அஸ்வதி, இசக்கியம்மாள், ரோகினி, உமா, ரஞ்சிதா, சரண்யா உள்ளிட்ட 6 பேருக்கு வகுப்பறையில் வாந்தி, மயக்கம் , காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து மயக்கிய நிலையில் அனைவரையும் வகுப்பு ஆசிரியை மற்றும் மாணவிகள் வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனர். உடனடியாக மருத்துவர்கள் மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் பற்றி அறிந்த தென்காசி கோட்டாட்சி தலைவர் மூர்த்தி, தாசில்தார் ராஜையா மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.













Click it and Unblock the Notifications