முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துச்சாமி திமுகவில் இணைந்தார்
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.முத்துச்சாமி என்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
எம்.ஜி.ஆர். காலத்தில் அமைச்சராக இருந்தவர் முத்துச்சாமி. அதிமுக உடைந்தபோது ஜானகி அணியில் இடம் பெற்றிருந்தார். பின்னர் ஜானகி அணியும், ஜெ. அணியும் இணைந்தபோது முத்துச்சாமியும் ஜெயலலிதா தலைமையை ஏற்று அரசியல் நடத்தி வந்தார்.
ஆனால் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டையனை மட்டும் உயர்வாக நடத்தி வந்த ஜெயலலிதா, அதே மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்சாமியை ஓரம் கட்டி ஒதுக்கி வைத்தார்.
இருப்பினும் அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் முத்துச்சாமி திமுகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முத்துச்சாமி தனது பிரச்சினைகளை என்னிடம் கூறலாம், என்னை நேரில் சந்தித்துப் பேசலாம் என்று அழைத்தார் ஜெயலலிதா. ஆனால் அதை நிராகரித்த முத்துச்சாமி, ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.அதில், ஜானகி அணியினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை குறித்து விளக்கியிருந்தார்.
இந்த நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வந்த முத்துச்சாமி,முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.












Click it and Unblock the Notifications