பெங்களூர் அணியின் உரிமையாளர் மல்லையாவின் நிறுவனத்தில் பங்குகள் உள்ளன - பவார் ஒப்புதல்

மல்லையாவின் யுனைட்டெட் ப்ரூவரிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் இந்த பாராமதி கிபேர் அசோசியேஷன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாராமதி நிறுவனத்தில் எனக்குப் பங்குகள் இருப்பது உண்மைதான். ஆனால் இது தொழில் முதலீடு மட்டுமே. இதற்கும், விஜய் மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார் பவார்.
ஐபிஎல் ஊழல் வெடித்தபோது தனக்கும், தனது கணவருக்கும், தந்தை பவாருக்கும் ஐபிஎல்லுடன் எந்தவிதத்தொடர்பும் இல்லை.இதை எனது இதயத்திலிருந்து சொல்கிறேன் என்று கூறியிருந்தார் பவாரின் மகள் சுப்ரியா சுலே. இதேபோல பவாரும் கூறியிருந்தார்.
ஆனால் சமீபத்தில் புனே அணியை ஏலம் வாங்க முயன்று தோற்ற சிட்டி கார்பபரேஷன் நிறுவனத்தில் பவார்குடும்பத்தினருக்கு 16.22 சதவீத பங்குஇருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின்உரிமையாளரான விஜய்மல்லையாவின் நிறுவனத்தில் பவாருக்கு பங்குகள் இருப்பதை அவரே ஒத்துக் கொண்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவலை பவாரே வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராயல் சேலஞசர்ஸ் அணியின் பேரன்ட் நிறுவனமான யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 51,000 பங்குகள் பவார் மற்றும் குடும்பத்தினருக்கு உள்ளது. இந்த பங்குகளின் தற்போதைய மதிப்பு ரூ. 6 கோடியாகும்.
கடந்த 2006ம் ஆண்டு பாராமதி கிரேப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் பவாருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ பங்குகள் எதுவும் இல்லை என்று மல்லையா மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications