For Daily Alerts
Just In
டெல்லியி்ல் ராஜபக்சேவை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்
ராஜபக்சே நாளை (ஜுன் 8) இந்தியா வருகிறார். பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந் நிலையில் இலங்கையில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி, முகாம்களி்ல் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஏராளமான தமிழர்களை விடுவிக்குமாறும், அவர்களை மறுகுடியேற்றும் செய்யுமாறும், தமிழர்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் வழங்குமாறும் ராஜபக்சேவை வலியுறுத்துமாறு பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே இந்தக் கோரிக்கையை ராஜபக்சேவை நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழக எம்பிக்கள் அவரை சந்தி்க்கவுள்ளனர்.
தமிழக எம்.பி.க்கள்- ராஜபக்சே சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்ய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவை, முதல்வர் கருணாநிதி டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
Comments
Story first published: Monday, June 7, 2010, 10:27 [IST]