உலகத் தமிழ் செம்மொழி மாநாடு-சோனியாவிடம் அழகிரி அழைப்பிதழ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு அழைப்பிதழை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் மத்திய அமைச்சர் அழகிரி நேரில் வழங்கினார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை கோவையில் நடக்கிறது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
மாநாட்டில் பங்கேற்கக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இன்று அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் சோனியாவிடம் இன்று அழைப்பிதழை வழங்கினர்.
அசே போல மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோரிடம் மத்திய இணையமைச்சர் காந்தி செல்வன் நேரில் அழைப்பிதழை வழங்கினார்.
பிரதமர் மன்மோகன் சிங் காஷ்மீர் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பியதும் அழைப்பிதழை அமைச்சர் அழகிரி தரவுள்ளார்.












Click it and Unblock the Notifications