தேவர் நினைவகம் அவமதிப்பு- பதட்டம்-போலீஸ் குவிப்பு
Subscribe to Oneindia Tamil
நாலாட்டின்புதூர்: கோவில்பட்டியில் உள்ள தேவர் நினைவகம் அவமதிக்கப்பட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கோவில்பட்டி மையதோப்பு ரோடு காமராஜர் நகர் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவகம் உள்ளது. இந்த நினைவகத்தில் யாரோ மர்ம நபர்கள் அசுத்தப்படுத்தி, அவமதிப்பு செய்துள்ளது இன்று காலை தெரிய வந்தது. இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து சாலை மறியிலில் ஈடுபட்டனர். தேவர் நினைவகத்தில் அவமதி்ப்பு செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications