For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'தமிழர் படுகொலை மீதுதான் இந்தியா-இலங்கை உறவு ஏற்பட வேண்டுமா?'-விஜய்காந்த்

By Chakra
Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: தமிழர்களின் படுகொலை மீதுதான் இந்தியா - இலங்கை நல்லுறவு ஏற்பட வேண்டுமா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து தமிழர் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்ட பிறகு, அந்நாட்டின் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டதால், அதனடிப்படையில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண இயலாது.

இலங்கை தமிழர்களுக்கு சமவாய்ப்பு மறுக்கப்பட்டதுதான் இன்றைய அவல நிலைக்கு காரணம். அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில், அரசியல் தீர்வு காணப்படும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே சொல்வது சிங்களர்கள் ஏற்றுக்கொள்ளாததை எதையும் தமிழர்களுக்கு தரமுடியாது என்பதையே காட்டுகிறது.

ஆயுதம் ஏந்திப் போராடியும் கிடைக்காத சமத்துவம் இப்போது அனாதைகளாக இருக்கும் தமிழர்களுக்கு எப்படி கிடைக்கப்போகிறது. குறைந்த பட்சம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி அழிக்கும் பிரச்சனைக்குக் கூட தீர்வு காணப்படவில்லை. தமிழர்களின் படுகொலை மீதுதான் இந்தியா - இலங்கை நல்லுறவு ஏற்பட வேண்டுமா?", என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X