தூத்துக்குடி அருகே கார் மீது லாரி மோதி 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கார் மீது லாரி மோதியதில் 5 பேர் பலியாயினர்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த நாகூர் கனி தனது குடும்பத்தினருடன் நேற்று தருவைகுளத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக டாடா சுமோவில் சென்றார்.

விழாவில் பங்கேற்று விட்டு அனைவரும் மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பி கொண்டிருந்தனர். சுமோவை திரேஸ்புரத்தை சேர்ந்த சீனி முகமது என்பவர் ஓட்டி வந்தார்.

பட்டினமருதூர் அருகே சென்றபோது தூத்துக்குடியில் இருந்து வந்த லாரி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை இடித்துத் தள்ளிவிட்டு எதிரே வந்த நாகூர் சுமோ மீதும் மோதியது.

இதில் சைக்களிலில் சென்ற சவேரியர்புரத்தை சேர்ந்த தொழிலாளி பாக்கியம் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் இருந்த நாகூர் கனியின் மனைவி ஜீனத் பீவி, அவரது மகன் கசாலி ஆகியோரும் பலியாயினர்.

படுகாயமடைந்த நாகூர் கனி, கசாலி மனைவி செய்யது அலி, கார் டிரைவர் சீனி முகமது ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சீனி முகமது, செய்யது அலி ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.

நாகூர் கனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்ததும் தூத்துக்குடி எஸ்பி செந்தில்குமார், ஏஎஸ்பி அனில்குமார் கிரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்திற்கு காரணமான லாரி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரு்ந்து ராமநாதபுரத்திற்கு சாம்பல் ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீ்ட்பதற்காக தூத்துக்குடி அதிரடிபடை வேன் விபத்து நடந்த இடத்திற்கு சென்று கொண்டிருந்தது. தருவைகுளம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது வேன் கவிழ்ந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+