10 மாஜி எம்எல்ஏக்களுடன் திமுகவில் சேர்ந்த முத்துச்சாமி

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முத்துச்சாமி சமீபத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.
இந் நிலையில் இன்று முறைப்படி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் 10 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் சுமார் 15,000 தொண்டர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார் முத்துச்சாமி.
இந்த திமுகவில் சேரும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் பர்கூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன்.
இவர் திமுகவில் இணைவது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில்,
1989 ம் ஆண்டு ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டேன். அதில் வெற்றிபெற்று தொகுதி மக்களுக்கு பணியாற்றினேன். மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இதனால் தமிழக முதல்வர் மு.கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையில் சனிக்கிழமை 500 பேருடன் திமுகவில் இணைகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஜானகி அணியைச் சேர்ந்தவர்களைத்தான் ஜெயலலிதா புறக்கணிப்பதாக அதிமுகவில் குமுறல் இருந்து வந்தது. ஆனால் அதிமுக உடைந்து, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சார்பில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனது தீவிர ஆதரவாரும் திமுகவுக்குத் தாவுவது அதிமுக நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications