விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு: எல்டிடிஇ ஆதரவாளர்கள் காரணமா?

Subscribe to Oneindia Tamil

Train
சென்னை: விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலையத்தில் ரயில் பாதை குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் பேரணி நிலையத்தை நோக்கி திருச்சி- சென்னை இடையிலான மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இருப்பினும் பெரும் அசம்பாவிதம் தகர்க்கப்பட்டது.

இன்று அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள்தான் இதற்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 2.10 மணியளவில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பேரணி ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலைய தண்டவாளத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் தண்டவாளம் வெடித்துச் சிதறியது.

இதையடுத்து ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் மலைக்கோட்டை ரயில் டிரைவரை எச்சரித்து வண்டியை நிறுத்தச் செய்தார். இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

விரைந்து வந்த போலீஸார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து ராஜபக்சே வருகையைக் கண்டிக்கும் துண்டுப் பிரசுரங்கள் கிடந்ததைப் பார்த்த போலீஸார் அதை மீட்டனர்.

குண்டுவெடிப்பு காரணமாக அப்பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னைக்கு வந்து கொண்டிருந்த பல ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன அல்லது மாற்றி விடப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+