பேரணி ரயில் பாதை தகர்ப்பு-ப.சிதம்பரத்துக்கு வைக்கப்பட்ட குறியா?

விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலையத்தில் ரயில் பாதை, தகர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜபக்சே வருகையைக் கண்டித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புகள் இதைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குறி வைத்தே இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
காரைக்குடியில் இன்று நடைபெறும் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பேசுவதற்காக எழும்பூரிலிருந்து நேற்று இரவு கிளம்பிய மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் திருச்சி வருவதாக இருந்தார்.
ஆனால் டெல்லியிலிருந்து ப.சிதம்பரம் பயணித்த விமானம் தாமதமானதால், அவரால் மலைக்கோட்டை ரயிலைப் பிடிக்க முடியவில்லை. இதனால், தனது சென்னை வீட்டில் தங்கினார்.
ப.சிதம்பரம் பயணிக்கவிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறி வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டிருப்பதால், இது ப.சிதம்பரத்திற்கு வைக்கப்பட்ட குறியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து சிதம்பரத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே,நேற்று திருச்சி போக முடியாத ப.சிதம்பரம் இன்று காலை விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் காரைக்குடி புறப்பட்டுச் சென்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications