பெரியாறு அணை - தமிழக, கேரள அரசுகள் 1 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் 5 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது. இதன் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் உள்ளார்.
தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணனும், கேரளா சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமசும் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, மத்திய நீர்வள ஆணையத்தை சேர்ந்த முன்னாள் தலைவர்கள் 2 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் கடந்த மாதம் 25ம் தேதி டெல்லியில் நடப்பதாக இருந்தது. அப்போது, கேரள உறுப்பினர் கே.டி. தாமசின் சகோதரர் மரணம் அடைந்ததால், அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. அதனால், அந்த கூட்டம் ஜூன் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதன்படி, டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய விருந்தினர் இல்லத்தில் இந்த கூட்டம் இன்று தொடங்கியது.
கூட்டம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் வெளியே வந்த தமிழகப் பிரதிநிதியான ஏ.ஆர்.லட்சுமணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லை பெரியார் அணை உயர்மட்டக் குழு அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 23ல் நடைபெறும். தங்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய இரு மாநிலங்களுக்கும் ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலஅரசுகளும் அறிக்கை அளித்த பின்னர் அது குறித்து ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன் பிறகு அணையை எப்போது நேரில் பார்வையிடுவது என்பது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் அமைத்துள்ள ஐந்து பேர் கொண்ட குழுவின் முதல் உயர்மட்டக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் 5 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது. இதன் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் உள்ளார்.
தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணனும், கேரளா சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமசும் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, மத்திய நீர்வள ஆணையத்தை சேர்ந்த முன்னாள் தலைவர்கள் 2 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் கடந்த மாதம் 25ம் தேதி டெல்லியில் நடப்பதாக இருந்தது. அப்போது, கேரள உறுப்பினர் கே.டி. தாமசின் சகோதரர் மரணம் அடைந்ததால், அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. அதனால், அந்த கூட்டம் ஜூன் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதன்படி, டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய விருந்தினர் இல்லத்தில் இந்த கூட்டம் இன்று தொடங்கியது.
கூட்டம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் வெளியே வந்த தமிழகப் பிரதிநிதியான ஏ.ஆர்.லட்சுமணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லை பெரியார் அணை உயர்மட்டக் குழு அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 23ல் நடைபெறும். தங்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய இரு மாநிலங்களுக்கும் ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலஅரசுகளும் அறிக்கை அளித்த பின்னர் அது குறித்து ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன் பிறகு அணையை எப்போது நேரில் பார்வையிடுவது என்பது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2.5 அடி உயர்வு:
இந் நிலையில் பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் இரண்டரை அடி உயர்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 110.50 அடியில் இருந்து இரண்டரை அடி உயர்ந்து 113 அடியானது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,523 கன அடியாக உள்ளது. தேனி மாவட்ட குடிநீருக்காக வினாடிக்கு 20 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.