விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு-காங். எம்.எல்.ஏ ஹசன் அலி மீது புகார்
Subscribe to Oneindia Tamil

கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதை முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மாசாணமுத்துவை சந்தித்த ஐந்து வக்கீல்கள், தண்டவாள தகர்ப்பில் ஈழத்தமிழர் ஆதரவாளர்களுக்கு தொடர்பு இல்லை. தண்டவாளம் தகர்ப்பில் காங்கிரஸ் எம்எல்ஏ அசன் அலிக்கு, தொடர்பு உள்ளது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. ஆனால் அதை வெளியிட்டால் வழக்கின் புலன் விசாரணைக்கு பாதகமாகிவிடும் என்று கூறி மனு கொடுத்தனர்.
இந்த திடீர் புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications