For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில் பாதை தகர்ப்பு நடந்த இடத்திற்கு அருகே ஜெலட்டின், டெட்டனேட்டர்கள் சிக்கின

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலையம் அருகே ரயில் பாதை குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட இடத்திற்கு சற்று தொலைவில் சுடுகாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி அருகே உள்ள மதுரைப்பாக்கம் சுடுகாட்டில் இந்த வெடிபொருட்கள் சிக்கின. இந்த இடம் பேரணி ரயில் நிலையப் பகுதியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ரயில் பாதை குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட பகுதிக்கு சற்றுதொலைவில் வெடிபொருட்கள் பெருமளவில் கிடைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரைப்பாக்கம் சுடுகாட்டு பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் 248 பெண்கள் உள்பட 255 பேர் மயானம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கல்யாணி என்ற பெண் சங்க ர்மல்லையா என்பவரது தோட்டத்தின் வேலை அருகே மரங்கள் அடர்ந்த புதரில் வெடிபொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தார்.

தகவல் அறி்ந்ததும் விக்கிரவாண்டி போலீஸார் விரைந்து வந்தனர். அங்கிருந்த மூட்டையில், 150 டெட்டனேட்டர்கள், 150 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஒரு எலக்ட்ரிக் பேட்டரி ஆகியவை இருந்தது தெரிய வந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X