For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ

By Chakra
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: நெய்வேலி நிலக்கரி நிறுவுனத்தின் 10 சதவீத பங்குகளை விற்று ரூ. 2,400 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு முயற்சி செய்வது, அந்த நிறுவனத்தை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதையே காட்டுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் 'நவரத்னா' பட்டியலில் இடம் பெறும் அளவுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வளர்ச்சி பெற்றுள்ளது.

என்.எல்.சி. நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்க, 2002ம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சி செய்த நேரத்தில், நாடாளுமன்றத்திலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடமும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தேன்.

அன்றைய பிரதமர் வாஜ்பாய் தமிழக மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பு அளித்து, என்.எல்.சி. பங்குகளை விற்க மாட்டோம். தனியார் மயமாக்க மாட்டோம் எனவும் அறிவித்தார். என்.எல்.சி. தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

தற்போது மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், என்.எல்.சியின் 10 சதவீத பங்குகளை விற்று ரூ. 2,400 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

மத்திய அரசு, என்.எல்.சி. நிறுவனத்தை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதை மத்திய நிலக்கரித்துறை அமைச்சரின் அறிவிப்பினால் அறிய முடிகிறது.

இல்லையெனில் ஆயிரம் கோடி ரூபாய் லாபம் தரும் என்.எல்.சி. பங்குகளை விற்பதற்கு காங்கிரஸ் அரசு தொடர்ந்து முயற்சித்து வருவது ஏன்?.

தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புகளை மீறி, என்.எல்.சி. நிறுவனத்தை தனியார் மயமாக்கிட தொடர்ந்து முயற்சித்து வரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் என்.எல்.சி. பங்குகள் விற்கும் திட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

நெய்வேலியில் திக ஆர்ப்பாட்டம்-கி.வீரமணி:

இந் நிலையில் நெய்வேலி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 30ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலி நிறுவனத்தில் உள்ள பங்குகளை தனியாருக்கு 10 சதவீத விழுக்காடு விற்று அதன் மூலம் கிடைக்கும் ரூ. 2,400 கோடி வருமானத்தை அடைவது என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது என்ற திடுக்கிடும் செய்தி கசிந்துள்ளது.

இதைவிட தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மிகப்பெரும் முட்டுக்கட்டையை மத்திய அரசு வேறு வகையில் போட்டுவிட முடியாது. 4 ஆண்டுகளுக்கு முன்பு (2006ல்) இப்படி ஒரு முடிவை மத்திய அரசு அதன் கூட்டணி கட்சிகளிடம் கூட கேட்காமல் எடுத்தது.

முதல்வர் கருணாநிதி காட்டிய கடும் எதிர்ப்பால் அது கிடப்பில் போடப்பட்டது. இப்போது புதைகுழிக்கு போன அந்த தீட்டம் மீண்டும் தலைநீ ட்டுகிறது. இதை தடுத்தே ஆக வேண்டும்.

முதல்வர் கருணாநிதி முயற்சி எடுத்து இந்த ஆபத்தினை முளையிலேயே கிள்ளி ஏறியும்படி செய்திடுவது மிகவும் அவசரமும், அவசியமும்.

மக்களிடையே உள்ள எதிர்ப்பினை ஒன்று திரட்டி காட்ட வருகிற 30ம் தேதி நெய்வேலியில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X