நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் 'நவரத்னா' பட்டியலில் இடம் பெறும் அளவுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வளர்ச்சி பெற்றுள்ளது.
என்.எல்.சி. நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்க, 2002ம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சி செய்த நேரத்தில், நாடாளுமன்றத்திலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடமும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தேன்.
அன்றைய பிரதமர் வாஜ்பாய் தமிழக மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பு அளித்து, என்.எல்.சி. பங்குகளை விற்க மாட்டோம். தனியார் மயமாக்க மாட்டோம் எனவும் அறிவித்தார். என்.எல்.சி. தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
தற்போது மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், என்.எல்.சியின் 10 சதவீத பங்குகளை விற்று ரூ. 2,400 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.
மத்திய அரசு, என்.எல்.சி. நிறுவனத்தை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதை மத்திய நிலக்கரித்துறை அமைச்சரின் அறிவிப்பினால் அறிய முடிகிறது.
இல்லையெனில் ஆயிரம் கோடி ரூபாய் லாபம் தரும் என்.எல்.சி. பங்குகளை விற்பதற்கு காங்கிரஸ் அரசு தொடர்ந்து முயற்சித்து வருவது ஏன்?.
தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புகளை மீறி, என்.எல்.சி. நிறுவனத்தை தனியார் மயமாக்கிட தொடர்ந்து முயற்சித்து வரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் என்.எல்.சி. பங்குகள் விற்கும் திட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
நெய்வேலியில் திக ஆர்ப்பாட்டம்-கி.வீரமணி:
இந் நிலையில் நெய்வேலி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 30ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலி நிறுவனத்தில் உள்ள பங்குகளை தனியாருக்கு 10 சதவீத விழுக்காடு விற்று அதன் மூலம் கிடைக்கும் ரூ. 2,400 கோடி வருமானத்தை அடைவது என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது என்ற திடுக்கிடும் செய்தி கசிந்துள்ளது.
இதைவிட தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மிகப்பெரும் முட்டுக்கட்டையை மத்திய அரசு வேறு வகையில் போட்டுவிட முடியாது. 4 ஆண்டுகளுக்கு முன்பு (2006ல்) இப்படி ஒரு முடிவை மத்திய அரசு அதன் கூட்டணி கட்சிகளிடம் கூட கேட்காமல் எடுத்தது.
முதல்வர் கருணாநிதி காட்டிய கடும் எதிர்ப்பால் அது கிடப்பில் போடப்பட்டது. இப்போது புதைகுழிக்கு போன அந்த தீட்டம் மீண்டும் தலைநீ ட்டுகிறது. இதை தடுத்தே ஆக வேண்டும்.
முதல்வர் கருணாநிதி முயற்சி எடுத்து இந்த ஆபத்தினை முளையிலேயே கிள்ளி ஏறியும்படி செய்திடுவது மிகவும் அவசரமும், அவசியமும்.
மக்களிடையே உள்ள எதிர்ப்பினை ஒன்று திரட்டி காட்ட வருகிற 30ம் தேதி நெய்வேலியில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications