11 மாத குழந்தையை சுவற்றில் அடித்து கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
சென்னை: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நபர், தனது 11 மாத கைக்குழந்தையை சுவற்றில் வீசி அடித்து மிகக் கொடூரமாக கொன்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி தேவராஜ் முதலி தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (30). இவர் பெசன்ட்நகரில் உள்ள ஒரு ஜிம்மில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யா (25). 4 குழந்தைகள் உள்ளனர்.
கடைசி குழந்தையான தனுஷ்காவுக்கு (11 மாதம்) கடந்த 1ந் தேதி உடல் நலம் சரியில்லை. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், குழந்தை இறந்ததாக கூறி கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தப் பின்னணியில் கடந்த 11ம் தேதி ஜாம்பஜார் காவல் நிலையத்தில் விஜயனின் மனைவி நித்யா ஒரு புகார் கொடுத்தார்.
அதில், 1ந் தேதி அன்று எங்களது 11 மாத கைக்குழந்தை தனுஷ்கா அழுது கொண்டிருந்தாள். அப்போது எனது கணவர் விஜயன் குழந்தையை தூக்கி சுவற்றில் வீசினார். அதில் குழந்தை இறந்துவிட்டது. ஆனால் அதை மறைத்து குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் விஜயனை பிடித்துவிசாரித்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பின்னர்தான் குழந்தை இறந்ததாக விஜயன் கூறினார். இதையடுத்து புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதால் இது இயற்கை மரணம் அல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து மீண்டும் விஜயனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் உண்மையை ஒத்துக் கொண்டார்.
போலீஸாரிடம் விஜயன் கொடுத்த வாக்குமூலம்:
சம்பவத்தன்று குழந்தை தனுஷ்காவுக்கு காய்ச்சல் இருந்ததால் அழுது கொண்டிருந்தது. அப்போது நான் என் மனைவி வித்யாவிடம் சாப்பாடு போடும்படி கூறினேன். அதற்கு வித்யா குழந்தை அழுதுகொண்டிருக்கிறது. அதற்கு மருந்து கொடுத்துவிட்டு தூங்க வைத்த பின்னர் சாப்பாடு போடுகிறேன் என்றார்.
தொடர்ந்து குழந்தை அழுது கொண்டிருக்கவே ஆத்திரத்தில் குழந்தையை தூக்கி வீசி எறிந்தேன். குழந்தை சுவற்றில் பட்டு கீழே விழுந்ததில் நெற்றியில் காயம்பட்டு மயக்கம் அடைந்தது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவரிடம் கொண்டு சென்றேன். குழந்தையை பரிசோதித்த அவர் சிறிது நேரத்திற்கு முன் குழந்தை இறந்துவிட்டதாக கூறினார்.
இதையடுத்து குழந்தையை அடக்கம் செய்ய அவரிடம் சர்ட்டிபிகேட் கேட்டேன். குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் அவரும் சர்ட்டிபிகேட் கொடுத்தார். அதன் மூலம் குழந்தையை அடக்கம் செய்தேன் என்றார்.
இதையடுத்து போலீஸார் விஜயனைக் கைது செய்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications