தாலிபான்கள் பிடியில் பணயக் கைதிகளாக 35 பாகிஸ்தான் வீரர்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லையோர சோதனைச் சாவடியில் தலிபான் தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல் நடத்தி 10 வீரர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். மேலும் 35 வீரர்களைக் காணவில்லை.
மொஹ்மந்த் மற்றும் பஜௌர் பழங்குடி இனப் பகுதிகளுக்கு இடையில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த திங்கட்கிழமை அன்று தாக்குதல் நடந்துள்ளதாகவும், இதில் 40 வீரர்களை காணவில்லை என்றும் பாகிஸ்தான் தலைமை ராணுவ பிரதிநிதி பேச்சாளர் மேஜர் ஜெனரல் அத்தர் அப்பாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆபகானிஸ்தான் நங்கர்ஹர் பகுதியில் உள்ள ஜலாலாபாத் பாகிஸ்தான் தூதரகத்தில் 5 வீரர்களை தலிபான்கள் ஒப்படைத்ததாகவும் மற்ற 35 வீரர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்றும் அப்பாஸ் தெரிவித்தார். மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
பழங்குடி இனப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளை தலிபான்கள் தாக்குவது புதிதல்ல. இருப்பினும் பாகிஸ்தான் வீரர்களை பணயக்கைதிகளாக பிடித்துள்ளது இதுவே முதல் முறை.
இதுகுறித்து பிபிசிக்கு அளித்த பேட்டியில் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 30 பாக்ஸ்தான் வீரர்களை ஆபகானிஸ்தானிலும், 10 பேரை பாகிஸ்தானிலும் பிடித்து வைத்துள்ளோம். தாக்குதலில் 7 பேரை எங்களது போராளிகள் கொன்று விட்டதாக தெரிவித்தார்.
சண்டையில் தப்பி 9 பாகிஸ்தான் தலிபான்களை ஆப்கான் ராணுவம் கைது செய்துள்ளதாக குனார் பகுதி போலீஸ் அதிகாரி கலீலுல்லா கூறினார்.
தலிபான்களின் பல்வேறு பிரிவினர் நங்கர்காரிலிருந்து செயல்படுகின்றனர். மேலும், மொஹ்மந்த் மற்றும் பஜௌர் பகுதிகளில் தான் பயிற்சி பெறுகின்றன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications