சங்கரராமன் கொலை வழக்கு-மேலும 3 சாட்சிகள் 'பல்டி'!
புதுச்சேரி: காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேலும 3 சாட்சிகள் ஜெயேந்திரர் தரப்புக்கு ஆதரவாக 'பல்டி' அடித்துள்ளனர்.
இந்தக் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரை 95 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நேற்று கோவில் கணக்கு அதிகாரி சதாசிவம், கோவில் அர்ச்சகர் நரசிம்மன், கோவில் ஊழியர் சம்பத், கோவில் கணக்காளர் சாமிநாதன், வழிகாட்டி வெங்கடாச்சாரி, வேதபாடசாலை ஆசிரியர் மாதவன், முனியம்மாள் ஆகிய 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் முனியம்மாள், வெங்கடாச்சாரி, மாதவன் ஆகியோர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
எனவே இவர்கள் பிறழ் சாட்சியாக (பல்டி) பதிவு செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை 82 சாட்சிகள் ஜெயேநேதிரருக்கு ஆதரவாக பல்டி அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்ரூவர் ரவியை குற்றவாளி பட்டியலில் சேர்க்க கோரிக்கை:
முன்னதாக இந்த வழக்கில் அப்ரூவர் ஆகிவிட்ட காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியத்தை குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் தேவதாஸ் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் 2வது நபராக இடம் பெற்றவர் ரவி சுப்பிரமணியம். இவர் அப்ரூவராக மாறினார். அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் இருந்து ரவி சுப்பிரமணியம் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், சாட்சி அளிக்கும்போது பிறழ் சாட்சி (பல்டி) அளித்தார். எனவே ரவி சுப்பிரமணியத்துக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை நிராகரித்து அவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இந்த மனுவை ஏற்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரவி சுப்பிரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. இதனால் சங்கரராமன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications