செம்மொழி மாநாடு எதிரொலி-பிச்சைக்காரர்கள் தேடிப் பிடித்து கைது

கோவையில் செம்மொழி மாநாடு 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான அறிஞர்கள், தலைவர்கள், சான்றோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
செம்மொழி மாநாடு தொடக்க விழா பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் மாநாடு தொடங்கும் முன்பே பல நாட்டு விருந்தினர்கள் தமிழகம் வருகை தருவார்கள் மற்றும் இவர்கள் அனைவரும் நாடு முழுவதும் ஆன்மீக தலங்கள், சுற்றுலா தலங்கள், போன்றவற்றிக்கு செல்வதுண்டு.
இதனை கருத்தில் கொண்டு சுற்றுலா தலங்கள், ஆன்மீக தலங்களில் நிறைந்திருக்கும் பிச்சைக்காரர்களை உடனடியாக அப்புறுப்படுத்த காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் நெல்லை மாவட்டம் பாபநாசம், குற்றாலம், தென்காசி, கன்னியாகுமரி உள்பட முக்கியமான பகுதிகளில் உள்ள ஆலயங்களில் தங்கியிருந்த பிச்சைக்காரர்கள் போன்றோரை போலீசார் கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று சான்றிதழ் வாங்கி அழைத்து சென்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது எங்கு இவர்களை கொண்டு செல்லவேண்டும் என்று இன்னும் உத்தரவு வரவில்லை என்றனர்.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் கைது!:
குற்றாலத்தில் கைது செய்யப்பட்டவர்களில் திண்டுக்கல் மாவட்டம் கசுவனப்பட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா கவுடர் என்பவரும் அடக்கம்.












Click it and Unblock the Notifications