ஆன்டர்சனை நாடு கடத்திக் கொண்டு வர சுப்ரீம் கோர்ட்டில் மனு-அமைச்சர்கள் குழு முடிவு
இதுதொடர்பாக விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு செய்யுமாறு இக்கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. மேலும் புதிய குற்றவியல் வழக்கை பதிவு செய்யவும் அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் இந்று 3வது நாளாக தொடர்ந்து இந்தக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
வாரன் ஆன்டர்சன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் மீதான வழக்குகளில் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்கு தொடருவது, ஆன்டர்சனை நாடு கடத்துமாறு கோரி அமெரிக்காவை அணுகுவது, யூனியன் கார்பைடு நிறுவன ஆலை வளாகத்தில் புதைந்து கிடக்கும் அபாயகரமான வேதிக் கழிவுகளை முற்றிலும் அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.