For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆன்டர்சனை நாடு கடத்திக் கொண்டு வர சுப்ரீம் கோர்ட்டில் மனு-அமைச்சர்கள் குழு முடிவு

Google Oneindia Tamil News

Anderson
டெல்லி: யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை நாடு கடத்திக் கொண்டு வருவது தொடர்பான உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவது குறித்து இன்று நடந்த போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பான மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு செய்யுமாறு இக்கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. மேலும் புதிய குற்றவியல் வழக்கை பதிவு செய்யவும் அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் இந்று 3வது நாளாக தொடர்ந்து இந்தக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

வாரன் ஆன்டர்சன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் மீதான வழக்குகளில் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்கு தொடருவது, ஆன்டர்சனை நாடு கடத்துமாறு கோரி அமெரிக்காவை அணுகுவது, யூனியன் கார்பைடு நிறுவன ஆலை வளாகத்தில் புதைந்து கிடக்கும் அபாயகரமான வேதிக் கழிவுகளை முற்றிலும் அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X