For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை முகப்பேர் கிணறுகளில் பெட்ரோல் வந்ததால் மக்கள் பரபரப்பு

Google Oneindia Tamil News

Well
சென்னை: சென்னை முகப்பேரில் உள்ள வீட்டுக்கிணறுகளில் பெட்ரோல் வருவதால அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முகப்பேரில் உள்ள வீடுகளின் கிணறுகளில் இருந்து இறைத்து வைக்கப்பட்ட தண்ணீர்ல் தீப்பற்ற அது பற்றி எரிந்திருக்கிறது. இதனால் ஆச்சரியம் அடைந்தவர்கள் மற்ற வாளிகளில் உள்ள தண்ணீரையும் பற்ற வைத்தபோது அதுவும் எரிந்திருக்கிறது.

இச்சம்பவத்தால் அச்சமடைந்த மக்கள் அப்பகுதி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். முகப்பேர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் குழாய்களிலிருந்து பெட்ரோல் கசிவு இருக்கலாம் என சநதேகிக்கப்படுகிறது.

ஏற்கனவே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி கிணறுகள் பெரும்பாலும் உப்பு நீராகவே உள்ளது. அதைத்தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சில இடங்களில் இந்த தண்ணீரைப் பயன்படுத்தினால் சரும அலர்ஜி ஏற்படும் அளவுக்கு மோசமாக உள்ளது. இந்த நிலையில் பெட்ரோலும் கலந்து வருவதால் மக்கள் நிலை மகா மோசமாகியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X