சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 4 பேர் கைது
சிவகாசி: சிவகாசி அருகே அனுமதியில்லாமல் பட்டாசு வைத்திருந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே வடப்பட்டியில் ராமசந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 3 நாள் முன்பு ஏற்பட்ட வெடி விபத்தில் குணசேகரன், கோமதியம்மாள், சுரேஷ், முத்துமாரி, வள்ளியம்மாள், லெட்சுமி, ஆகியோர் பலியாகினர். சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கணபதியம்மாள் நேற்று இறந்தார். இதன் முலம் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் 3 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
சாத்தூர் ரோடு அனுப்பன்குலத்தை சேர்ந்த கணேசன் லாரி செட் குடோன் நடத்தி வருகிறார். இங்கு அனுமதியின்று பட்டாசு வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார். விருதுநகர் ரோட்டில் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த கணேசன் லைசென்ஸ் பெற்றிருந்த அளவை விட கூடுதலாக வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார்.
பராசக்தி காலனியை சேர்ந்த ராஜேந்திரன். இவர் குடோனில் அனுமதியின்றி வைத்திருந்த 50 சரவெடி பாக்கெட்டுகளால் கைது செய்யப்பட்டார். சிவகாசி அய்யனார் காலனியை சேர்ந்த அய்யனார் லாரி ஷெட்டில் 30 பெட்டி சரவெடி அனுமதியின்றி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications