விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா?
சென்னை: விழுப்புரம் அருகே தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் பற்றி தகவல் ஏதும் கிடைக்காததால் க்யூ பிரிவு போலீசார் திணறி வருகின்றனர். இதனால் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஜூன் 12-ம் தேதியன்று விழுப்புரம் மாவட்டம் சித்தணி கிராமத்தில் உள்ள தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக க்யூ பிரிவு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கங்கள் காரணமாக இருக்கலாம் என்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.
2,3 நாட்களுக்கு மேல் நடந்த விசாரணையில் இந்த வழக்கிற்கு தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களை அறிந்தவர்கள் குறித்து எந்த விவரமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும், அதில் தொடர்புள்ளவர்கள் பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் தெரியாமல் உள்ளது.
இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட கோணத்திலேயே க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்துவதால் தான் உண்மையான குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் இருப்பதாகவும், அதனால் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. எனவே, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications