அமைச்சர் கே.என்.நேரு தாயார் மரணம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேருவின் தாயார் நேற்று மரணமடைந்தார். அவரது உடல் இன்று சொந்த ஊரான திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே உள்ள கிராமத்தில் தகனம் செய்யப்படுகிறது.
கே.என்.நேருவின் தாயார் என்.பங்காரு அம்மாள். 93 வயதான இவர் உடல் நலக்குறைவினால் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இதையடுத்து நேரு திருச்சி விரைந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் பங்காரு அம்மாள் மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் தில்லை நகரில் உள்ள நேருவி்ன் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அஹ்கு அதிாகரிகள், திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் புள்ளம்பாடி அருகே உள்ள காணக்கிளியநல்லூருக்கு பங்காரு அம்மாளின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று உடல் தகனம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications