மதானியை பார்க்க அனுமதி கோரி மனைவி கோர்ட்டில் மனு
திருவனந்தபுரம்: தனது கணவர் அப்துல் நாசர் மதானியை சந்திக்க அனுமதி கோரி கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு கோர்ட்டில் மதானியின் மனைவி சூபியா மனு தாக்கல்செய்துள்ளார்.
தமிழக பஸ் எரிப்பு வழக்கில் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட மதானியின் மனைவி சூபியா கைது செய்யப்பட்டு பின் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அவர் எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
இந்த நிலையில், இந்த நிபந்தனையை தளர்த்த கோரி கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றத்தில் சூபியா கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. முறையான காரணத்தை தெரிவித்தால் மனுவை பரிசீலிப்பதாக நீதிமன்றம் கூறியது.
இந்த நிலையில் சூபியா நேற்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் போலீசார் என் கணவரை எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்புள்ளது. என் கணவர் இப்போது கொல்லம் மாவட்டம் அன்வார்சேரியில் உள்ள ஒரு வீட்டில் உள்ளார். அவரை பார்க்க நான் செல்ல வேண்டும்.
அதனால் எர்ணாகுளத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று எனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்த வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications