For Daily Alerts
Just In
முதல்வரை விமர்சித்துப் பேசியதால் அமளி-மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சஸ்பெண்ட்
மதுரை: மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான அதிமுகவின் சாலை முத்து முதல்வர் கருணாநிதியை விமர்சித்துப் பேசியதால் ஏற்பட்ட அமளியைத் தொடர்நது அவரை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து மேயர் தேன்மொழி உத்தரவிட்டார்.
இன்று மதுரை மாநாகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெற்றது.அப்போது பேசிய அதிமுக வைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சாலைமுத்து முதல்வர் கருணாநிதி குறித்துப் பேசினார்.
இதையடுத்து அவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. சாலைமுத்து முதல்வரை அவமரியாதையாக பேசுவதாக திமுகவினர் குற்றம் சாட்டினர்.
சாலைமுத்துவுக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்களும் அமளியில் குதித்ததால் பெரும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து சாலைமுத்துவை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து மேயயர் தேன்மொழி உத்தரவிட்டார்.
Story first published: Tuesday, June 29, 2010, 12:09 [IST]