ஹாட்ரிக் நாயகி சாய்னாவுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
சென்னை: இந்தோனேசியாவில் நடந்த பாட்மின்டன் சூப்பர் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற சாய்னா நெஹ்வால் சென்னை திரும்பினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கு முன் இந்திய ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் ஆகிய இரு போட்டிகளிலும் அவர் சாம்பியன் பட்டத்தை வென்ரிறிருந்தார். இதையடுத்து 3வது பட்டமாக இந்தோனேசியாவில் நடந்த போட்டியிலும் வெற்றி பெற்ற சாய்னா இன்று அதிகாலையில் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாட்மின்டன் அசோசியேஷன் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாய்னா,
இந்த ஹாட்ரிக் சாதனையை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இது சாத்தியமாவதற்குக் என் மனஉறுதி தான் கைகொடுத்தது. தற்போது தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள நான், முதல் இடத்திற்கு செல்ல முயற்ச்சி செய்வேன். மேலும், உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பட்டம் வெல்வதே எனது இலக்காக இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications