திருப்பூர் அருகே ரயில் பாதையில் பாறாங்கல்-ரயில் தப்பியது-சதியாளர்களுக்கு வலைவீச்சு
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் அருகே ஊத்துக்குளியில், ரயில் பாதையின் நடுவே பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வைத்த சதியாளர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே ரயில் பாதையில் குண்டு வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆங்காங்கு ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் நடந்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு சென்னை பட்டாபிராம் அருகே ரயில் பாதையில் கான்க்ரீட் கொட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஊத்துக்குளி அருகே ரயில் தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல்லைப் போட்டு வைத்துள்ளனர். அந்த சமயத்தில் அந்தப் பாதையில் வந்த ரயிலின் டிரைவர் இதைப் பார்த்து விட்டு ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
கல் அகற்றப்பட்ட பின்னர் ரயில் கிளம்பிச் சென்றது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications