கூட்டணி பேச்சு முடிந்தது-விரைவில் ஜெ., விஜயகாந்த் சந்திப்பு?

சட்டசபைத் தேர்தலில் எப்பாடு பட்டாவது வென்றாக வேண்டிய மிக கஷ்டமான நிலையில் இருக்கிறார் ஜெயலலிதா. இதற்காக கூட்டணியைப் பலப்படுத்த வேண்டிய நிலையிலும் அவர் உள்ளார்.
இதையடுத்து தேமுதிகவை தனது வலையில் இழுக்க ஜெயலலிதா தீர்மானித்திருக்கிறார். இதற்காக தேமுதிக தரப்புடன் அதிமுகவின் 2ம் கட்டத் தலைவர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தை தற்போது வெற்றிகரமாக முடிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பண்ருட்டி ராமச்சந்திரன், பிரமேலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக குழுவுடன், அதிமுக தரப்பில் சசிகலா உள்ளிட்டோர் அடங்கிய குழு பேசியுள்ளதாம். இந்தப் பேச்சுவார்த்தையின் போது தங்களுக்கு 15 சதவீத வாக்கு வங்கி இருப்பதால் அதிக சீட்களை தர வேண்டும் என தேமுதிக தரப்பு வற்புறுத்தியதாம்.
இந்தக் கோரிக்கையை லாவகமாக எதிர்கொண்ட அதிமுக தரப்பு அதிகபட்சம் 50 சீட்கள் வரை தரத் தயாராக இருப்பதாக கூறியுள்ளதாம். முதலி்ல இதற்கு விஜயகாந்த் தயங்கினாலும் தற்போது இதற்கு ஒத்து வர அவர் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டமாக ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் விரைவில் சந்திக்கவுள்ளனராம். இதற்கு முதல் கட்டமாக ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் ஜூலை 5ம் தேதி நடக்கவுள்ள பந்த் போராட்டத்தில் தேமுதிகவையும் கலந்து கொள்ள வைக்கும் பொறுப்பு தா.பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். அவரும் விஜயகாந்த்தை இதுதொடர்பாக நேரில் சந்தித்து வற்புறுத்தவுள்ளாராம்.
இந்தப் போராட்டத்தின்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணி இதுதான் என்பதை மறைமுகமாக காட்டுவது ஜெயலலிதாவின் திட்டமாம்.
இந்த போராட்டத்திற்குப் பின்னர் முறைப்படி அதிமுக கூட்டணியை ஜெயலலிதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக விஜயகாந்த், ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி விடுவார் என்று தெரிகிறது.
தேமுதிக தவிர இன்னொரு முக்கிய கட்சிக்கும் அதிமுக தரப்பிலிருந்து வலை வீசப்பட்டுள்ளதாம். அந்தக் கட்சியும், அதிமுகவின் ஆஃபர் குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications