For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பிணத்தை காரில் ஏற்றும் போது பிடிபட்டனர்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார். பிணத்தை காரில் ஏற்றத முயன்ற போது, ஊர் மக்களிடம் பிடிபட்டனர்.

மதுரையை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 42). இவரது மனைவி சத்யா (35). இவர்களுக்கு கவுதம் (15), கவுசல்யன் (10), தரணி (6) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

இவர் 10 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையத்தில் குடியேறினார். இவர் அங்கு மருந்து கடை நடத்தி வந்தார். வியாபாரத்தை கவனிக்கும் பொருட்டு 2 மகன்களையும் மதுரையில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்தார். மகள் தரணியை மட்டும் தங்களுடன் வைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் இவர் மனைவி சத்யாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டது. முனீஸ்வரன் கடைக்கு சென்ற பின் சத்யாவை பார்க்க அந்த வாலிபர்கள் அவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றனர்.

இது பற்றி கேள்விப்பட்ட அவர் தன் மனைவியை கண்டித்தார். ஆனாலும் சத்யா தனது கள்ளத் தொடர்பினை விடவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்து வீட்டிற்கு வந்த முனீஸ்வரன் தன் மனைவி சில வாலிபர்களுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதை பார்த்து ஆத்திரம் அடைந்த முனீஸ்வரன் தனது மனைவியை திட்டினார். அப்போது அங்கிருந்த வாலிபர்களுடன் சேர்ந்து சத்யா, தனது கணவர் முனீஸ்வரனை தாக்கினார்.

இதில் முனீஸ்வரன் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த கொலையை ஊர் மக்களிடம் இருந்து மறைக்க அவர்கள் முனீஸ்வரன் பிணத்தை மதுரைக்கு கொண்டு சென்று அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறி ஏமாற்றி விடலாம் என்று தீர்மானித்தனர்.

நேற்று அதிகாலை திட்டத்தின்படி முனீஸ்வரனின் பிணத்தை வெள்ளை துணியால் சுற்றி ஒரு காரில் ஏற்றினர். அப்போது சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் காரை சுற்றி வளைத்தனர்.

காரில் இருந்த 3 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர். காரில் முனீஸ்வரன் பிணத்தை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முனீஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிடிபட்ட சத்யாவிடமும், வீட்டில் இருந்த மகள் தரணியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, "இரவில் வீட்டுக்கு 3 பேர் வந்ததாகவும் அவர்கள் தனது தாயுடன் சேர்ந்து தந்தையை தாக்கியதாகவும்'' தரணி கூறினாள்.

அவள் தெரிவித்த அங்க அடையாளங்களை வைத்து அந்த 3 பேர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X