இந்த ஆண்டின் நிதி பற்றாக்குறை ரூ.3.81 லட்சம் கோடி!
டெல்லி: இந்த ஆண்டில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை ரூ.3.81 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2010-11ம் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-மே) நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.01 லட்சம் கோடியாக உள்ளது.
முழு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.3.81 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் வருவாயைவிட செலவுகள் அதிகரிக்கும்போது நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் முதல் இரண்டு மாதங்களில், மத்திய அரசு மேற்கொண்ட மொத்த செலவினம், சென்ற நிதி ஆண்டின் இதே காலகட்டதோடு ஒப்பிடுகையில் 12.1 சதவீதம் அதிகரித்து ரூ.1.47 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
அதேசமயம் வரி வருவாய், பங்குகள் விற்பனை மற்றும் இதர வருவாய் மூலம் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் 6.3 சதவீதம் மட்டுமே உயர்ந்து ரூ.46,000 கோடியாக உள்ளது. இதில் வரி வசூல் மூலம் கிடைத்த நிதி ரூ.31,896 கோடியாகும். இது சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் 5.5 சதவீதம் அதிகம்.
இந் நிலையில், 3ஜி அலைவரிசை ஒதுக்கீட்டு ஏலம் வாயிலாக மத்திய அரசுக்கு ரூ.67,720 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும், வயர்லெஸ் பிராண்ட் பாண்ட் அலைவரிசை ஒதுக்கீடு வாயிலாகவும் ரூ.38,540 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதனால் இந்த ஆண்டு நிதி பற்றாக்குறையை வெற்றிகரமாக எதிர்கொண்டுவிட முடியும்.
மேலும் பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.40,000 கோடி வருவாய் திரட்டவும், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் கேஸ் விலையை உயர்த்தியதன் மூலமும் மத்திய அரசின் மானியச் சுமை குறையும்.
இதனால் இந்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறை மேலும் குறையும்.












Click it and Unblock the Notifications