For Daily Alerts
Just In
தேமுதிகவும், பாமகவும் பந்த்தில் பங்கேற்க வேண்டும்-சிபிஎம் அழைப்பு
இதுகுறித்து அவர் கூறுகையில்,
நாட்டு க்களைப் பற்றி கவலைப்படாமல் தனியார் எண்ணெய் நிறுவனங்களின் லாபத்துக்காக பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. 5 ந்தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம், மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டம்.
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை வாபஸ் பெற நிர்பந்திப்பதற்கான போராட்டம் இது. எனவே இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
எனவே அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று பட்டு ஒரே அணியில் திரள வேண்டும். பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் அவசியம் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்த இரண்டு கட்சிகளும் போராட்டத்தில் கலந்து கொள்வது பற்றி நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
Comments
Story first published: Saturday, July 3, 2010, 13:21 [IST]