For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேமுதிகவும், பாமகவும் பந்த்தில் பங்கேற்க வேண்டும்-சிபிஎம் அழைப்பு

Google Oneindia Tamil News

Ramdoss and Vijayakanth
சென்னை: ஜூன் 5ம் தேதி நடைபெறும் பாரத் பந்த் போராட்டத்தில் பாமகவும், தேமுதிகவும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

நாட்டு க்களைப் பற்றி கவலைப்படாமல் தனியார் எண்ணெய் நிறுவனங்களின் லாபத்துக்காக பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. 5 ந்தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம், மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டம்.

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை வாபஸ் பெற நிர்பந்திப்பதற்கான போராட்டம் இது. எனவே இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

எனவே அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று பட்டு ஒரே அணியில் திரள வேண்டும். பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் அவசியம் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்த இரண்டு கட்சிகளும் போராட்டத்தில் கலந்து கொள்வது பற்றி நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X