பஸ் டிரைவருக்கு செருப்படி-மதுரையில் அரசு பஸ்டிரைவர்கள் ஸ்டிரைக்
மதுரை: மதுரையில் அரசு பஸ் டிரைவர் ஒருவரை திருமண கோஷ்டியினர் செருப்பால் அடித்ததால் பஸ் டிரைவர்கள் திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். இதனால் மதுரையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மதுரை பெரியார் நிலையம் - ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வேன் டிரைவர் ஒருவர் திடீரென யு டர்ன் அடித்து வந்துள்ளார். இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ்சுடன் வேன் மோதப் பார்த்தது. இதைப் பார்த்த அரசு பஸ் டிரைவர் இறங்கி வந்து வேன் டிரைவருடன் சண்டை போட்டுள்ளார்.
இதனால் வேனில் இருந்த திருமண கோஷ்டியினர் ஆத்திரமடைந்து பஸ் டிரைவரை செருப்பால் அடித்துள்ளனர். இந்த சம்பவத்தால் கோபமடைந்த பஸ் டிரைவர் மற்ற டிரைவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த வழியில் வந்த அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டது.
டிரைவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் மதுரையின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பி்த்தது. போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தியப் பிறகு டிரைவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதையடுத்து போக்குவரத்து சீரானது.












Click it and Unblock the Notifications