ரவுடியால் கொலை செய்யப்பட்ட ஏட்டு மனைவிக்கு ஆசிரியை பணி
சென்னை: பணியில் இருந்தபோது ரவுடியால் கொலை செய்யப்பட்ட ஏட்டு மனைவிக்கு ஆசிரியை பணி்க்கான நியமன ஆணையை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சாத்தூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்த நாகரத்தினம் கடந்த ஏப்ரல் மாதம் பணியில் இருந்தபோது குமார் என்ற ரவுடியால் படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினை காப்பாற்றும் பொருட்டு நாகரத்தினத்தின் மனைவி புவனேஸ்வரிக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று புவனேஸ்வரிக்கு ஓவிய ஆசிரியை பணி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஓவிய ஆசிரியராக பணியாற்ற பணி நியமன ஆணையை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று புவனேஸ்வரிக்கு வழங்கினார்.
அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications